காதல் மொழி…
பதிந்தவர் பாரதி சே மேல் December 8, 2008

பூவின் வெளிச்சம்
நிறைந்து படர
பேரருவி நிசப்தத்தில்
விழுந்து கரைய
புல்லின் விருட்சம்
பூமி பிளக்க
ஆல் பனித் துளியில்
அமிழ்ந்து கொண்டிருக்க…
நம்ப முடியாமல் எழுந்தேன் கனவினின்று,
இருப்பினும்
விடாப்பிடியாக நம்புகின்றேன், காதலினின்று.
வல்லினம் காதலில் மலிந்து கிடக்கின்றதே!
யார் சொன்னது, காதல் மெல்லினமென்று?
மூன்றில் இரண்டு பங்கு வல்லினம்தான் காதலில்…
யோசியுங்கள்…
-(மே 2007, முரண் பற்றி முயன்று, வலிந்து முளைக்க வைத்த முதல் முயற்சி.)