பாரதி சே

இனியொரு விதி செய்வோம்

காதல் மொழி…

பதிந்தவர் பாரதி சே மேல் December 8, 2008

lukyluk2

பூவின் வெளிச்சம்

நிறைந்து படர

பேரருவி நிசப்தத்தில்

விழுந்து கரைய

புல்லின் விருட்சம்

பூமி பிளக்க

ஆல் பனித் துளியில்

அமிழ்ந்து கொண்டிருக்க

நம்ப முடியாமல் எழுந்தேன் கனவினின்று,

இருப்பினும்

விடாப்பிடியாக நம்புகின்றேன், காதலினின்று.

வல்லினம் காதலில் மலிந்து கிடக்கின்றதே!

யார் சொன்னது, காதல் மெல்லினமென்று?

மூன்றில் இரண்டு பங்கு வல்லினம்தான் காதலில்

யோசியுங்கள்

-(மே 2007, முரண் பற்றி முயன்று, வலிந்து முளைக்க வைத்த முதல் முயற்சி.)

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>