வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால்
தற்கொலை செய்துகொள். ஆனால்,
தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு
துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
சொன்னார்கள்
Posted by பாரதி சே மேல் நவம்பர் 20, 2010

படித்துத் திகைத்தவை
பார்த்துத் தெரிந்தவை
பிறர்சொல்லி அறிந்தவை
பீடுநடையிட்டு நினைவதில் நின்றவை
புழக்கத்தில் படிந்துவிட்டவை
பூமிதனில் புதைந்துவிட்டவை,
பெருவெளியில் வித்தாகின என் பதிவில் இவை,
பேராற்றலுடன் பரிசீலிப்பது, உங்கள் பார்வை.
.... இங்கே பதியப்பட்டது சொன்னார்கள் | குறிச்சொல்லிடப்பட்டது: சொன்னார்கள், பொன்மொழிகள், quotes | Leave a Comment »
தற்கொலை செய்யத் துணிவிருப்பதால் வாழ்கின்றேன்!
Posted by பாரதி சே மேல் செப்டம்பர் 21, 2010
பாதங்கள் வளர்கின்றன,
பாதைகள் நகர்கின்றன.
நீளும் நீல வானமும்,
வாழ்வின் விளிம்பும்
எதிரெதிர் திசைகளில், நுரையீரலின்
நிதானமான இயக்கத்துடன்.
.... இங்கே பதியப்பட்டது கவிதை | Leave a Comment »
திருமண வாழ்த்து
Posted by பாரதி சே மேல் April 4, 2009

விடுமுறை பெற்று
விழாமுடித்து, விடைபெற வரவில்லை.
விழி நிறைத்து வாழ்த்து சொல்லி
வழியனுப்ப வரவில்லை.
விலா எலும்பாய் விளங்கி நின்று
விழு முன்னே தோள் கொடுக்கும் தோழர்களாய்
சரித்திரப் பக்கங்களில் உயிர்மெய்
எழுத்துக்களால் உயிர்த்து வரும்
சாதனைதனை வெற்றிச் சிகரம் எடுத்துப்
புறப்படும் நண்பர்களுக்கு
எங்கள் சந்தோஷத்தில்
சரிபாதிக்கு மேலும்,
அனுபவத்தில் அடைந்ததனைத்தும்,
அச்சுப் பிறழாமல் கொடுத்து,
அன்பும், அறமும் ஊற்றாய் ஊடே வைத்து,
பண்பும், பயனும் குறையாமல் விளைய,
இல்வாழ்வில் இன்பங்கள் எல்லாம்
இடையறாது செழிக்க
இதயத்திலிருந்து வாழ்த்துகின்றோம்..
‘இனிய திருமண வாழ்த்துக்கள்!!’
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: திருமண வாழ்த்து, திருமணம், வாழ்த்து | Leave a Comment »
கால்சியம் முதல் ஜெலட்டின் வரை…
Posted by பாரதி சே மேல் April 4, 2009

படிமங்களாய்க் கிடந்தோம்
படிநிலையாய் பரிணாமத்தில்
நுண்ணுயிர்களாய் நிகழ்ந்தோம்
நாகரீகங்களில் நடை பயின்றோம்
கலாச்சாரக் கரை கண்டோம்
கரைதனில் பல கடை விரித்தோம்
அணுவைப் பிளந்தோம்
ஆழ்கடல் அளந்தோம்
சரித்திரம் பல கடந்தோம்
தரித்திரம் நீங்கா மிக உழன்றோம்
சாத்திர மூத்திரங்களில் சகலமும் இழந்தோம்
நினைவுகளில் திளைத்தோம்
மகிழ்வுகளில் நனைந்தோம்
விடுபட்ட இடங்களை
சந்ததிகளை இட்டு நிரப்பினோம்
நிரம்ப மறுத்த வரிகளில்
தனிமை நிறைத்தோம்
விழிகள் குறுகின, வழிகளும்.
இட்டு நிரப்ப முடியாத
அந்த இடைவெளிக் கோடுகள்,
குழிகளாய், பள்ளத்தாக்குகளாய் மாறி
விழி கடந்து செல்லும் முன்
விழிகளை விசாலமாக்குங்கள்.
நினைவுகளின் சடலங்களில்
நீந்த வேண்டி வரலாம்,
மறுபிறப்புக்கு ஆயத்தமாகுங்கள்…
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: சரித்திரம், பார்வை, வரலாறு | Leave a Comment »
மறக்கவியலாக் கவிதை
Posted by பாரதி சே மேல் ஜனவரி 2, 2009

மறக்கவியலாக் கவிதை
மாலை மழையில்
நிரம்பிய வார்த்தைகள்
மழை நின்றதும்
வழிந்து மறந்தது.
UNFORGETTABLE POEM
The stopped rain runaway
by stealing
my drenched words of
feeling.
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: இரசிப்புத்தன்மை, காதல், மறக்கவியலாக் கவிதை, மழை, rain, UNFORGETTABLE POEM | Leave a Comment »
சுதந்திரம் வேண்டுமென சங்கே முழங்கு…
Posted by பாரதி சே மேல் December 9, 2008

சுந்தரமாய் ஓர் மந்திரம்
சுகமாய்ச் சுடர் விட்டெரிய
வலிமையாய் ஓர் எந்திரம்
வலி பல கொண்டே படைத்தோம்
வளமையாய் அதை அமைக்க
பொலிவாய்ப் பல திட்டங்கள்
கனவுகள் பல கொண்டே
கனிவாய் விதைத்தோம் களனியிலே.
வடிவினை வாட்டமாய்க் கொண்டு
வர்ணங்கள் மூன்று கண்டு
வர்ணணைகளுடன் தந்தோம்
வட்டம் நடுவிற் கொண்டு
இதுவே எங்கள் தேசியக் கொடி என்று.
சீரோடு பறக்க சிறப்புறவே எழுந்த கொடி
மாரோடு அறைந்து தன் மனக்கவலை இறக்குதடி.
மூவர்ணம் கொண்டாலும் நாவரளும் தொனியில்
வர்ண்ணைகளுடன் வாகாய்ச் சொன்ன வர்ணமெல்லாம்
வழிமாறிப் போனதென வருத்தமாய்ச் சொல்லுதடி.
சினந்து வழிந்த காவியோ,
சிவப்பாய் மும்பையிலும், வறுமையிலும்
பிணைந்து நின்றுவிட்டது.
சிறப்பாய் இருந்த மனித
உதிரத்தின் சிவப்போ, உள்ளூர
சாதி வெறியாய் ஊறிவிட்டது.
சமயமாய் சிந்திய காவியோ,
அரசியலாய் உருவெடுத்து,
அமைதி குலைத்து, மசூதி இடித்து
ஆர்ப்பாட்டம் செய்கின்றது.
உவந்து பறந்த வெள்ளை, அச்சு
உழன்ற காகிதமாய், சாதிப்பெயர் காட்டிச்
சான்றிதழாய்ச் சங்கோஜமாய்ச் சிரித்து நிற்கின்றது.
சருமத்தில் படர்ந்த வெண்மையோ,
சடுதியில் மதி மயக்கும் சக்தியாம்
வெள்ளித்திரை முதல் வெள்ளை மாளிகை வரை
பல்லிளிக்கும் பழக்கத்தைப் பதமாய்க் கற்றுத் தருகின்றது.
பரவி விரியும் பச்சையோ,
முதுகெலும்பை முடமாக்கி
மூளையை முன்னுக்கு வைக்கின்றது.
விவசாயத்தை விபச்சாரி ஆக்கி
விண்வெளிதனை விமர்சையாய் மணக்கின்றது.
விவசாயியின் நிலையோ, இன்று வாழ்வா, சாவா?
விமர்சையான வாழ்விற்கு இன்றே படி mainframe, java.
இதுதான் விவசாய நாட்டில், பசுமைப்புரட்சியின் விளைவா?
எஞ்சிய பச்சையும் எழுதுகோல் மையாய்,
எண்பதும், இருபதுமாய், கிடைப்பது பலவும்
கையூட்டாய், அதிகாரத்துடன் பெற்றுக்
கையெழுத்தாய், அரசாங்க கோப்புகளில் ஒழுகுகின்றது.
நிர்கதியற்று நடுவில் நிற்கும் நீல வர்ண சக்கரமோ,
நிர்மூலமான நதிகளில் கலக்கும் வேதிப்பொருட்களாலும்,
நாதியற்று நீங்கள் நடுவழியில் விடும் குப்பைகளாலும்,
பேதியுற்று, கேட்க நாதியற்று
நிதர்சனமாய், நிதானமாய் இறந்து கொண்டிருக்கின்றது.
இவ்வளவும் இவ்வாறே நிகழ்ந்து கொண்டிருக்க,
எள்ளளவும் தயக்கமின்றி, ஆர்ப்பாட்டமாய்த் தயாராகிறீர்கள்
அடுத்த கொண்டாட்டத்திற்கு.
இதோ, இந்த வருடமும்
அதே கூட்டம், அதே உரை, முடிவில் இனிப்பு வழங்கல்…
இறுதியில் கைவிடப்பட்ட தனிக்கம்பத்தில்
தவிப்புடன் நான் மட்டும் தனியே பறந்து கொண்டிருப்பேன்.
பட்டொளி வீசியல்ல….
பாவமாய்த் தனியே பேசி…
- (ஆகஸ்ட் 2008, ’சுதந்திரம்’ வேண்டி நின்ற சுந்தர’தேவி’க்கு.)
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: இந்தியா, சங்கே முழங்கு, சுதந்திரம், பதுயுகம், மூவர்ணம் | Leave a Comment »
உங்களையே கற்பனை பண்ணிக்கலாம்:-)
Posted by பாரதி சே மேல் December 8, 2008

ஈர்ப்புகள் வார்க்கப்படலாம்
வார்ப்புகள் ஈர்க்கப்படுவதில்லை.
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: கற்பனை, தன்னிகரில்லா, தலைவர், நாயகன், நாயகி | Leave a Comment »
காதல் மொழி…
Posted by பாரதி சே மேல் December 8, 2008

பூவின் வெளிச்சம்
நிறைந்து படர
பேரருவி நிசப்தத்தில்
விழுந்து கரைய
புல்லின் விருட்சம்
பூமி பிளக்க
ஆல் பனித் துளியில்
அமிழ்ந்து கொண்டிருக்க…
நம்ப முடியாமல் எழுந்தேன் கனவினின்று,
இருப்பினும்
விடாப்பிடியாக நம்புகின்றேன், காதலினின்று.
வல்லினம் காதலில் மலிந்து கிடக்கின்றதே!
யார் சொன்னது, காதல் மெல்லினமென்று?
மூன்றில் இரண்டு பங்கு வல்லினம்தான் காதலில்…
யோசியுங்கள்…
-(மே 2007, முரண் பற்றி முயன்று, வலிந்து முளைக்க வைத்த முதல் முயற்சி.)
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: காதல், முரண், வல்லினம் | Leave a Comment »
ப்ரூட்டஸே, புகழ் பெறுக
Posted by பாரதி சே மேல் December 8, 2008

தன் முதுகின் அழுக்கறியார்
தானே தருமன் என்றுரைப்பார்
தவறுக்கெல்லாம் விளக்குரைப்பார்
தனக்கென்றால் கருத்துரைப்பார்
தன்நிலை பிறர்க்கென்றால்
தரணி கெட்டதென்பார்
தரங்கெட்ட மனிதர் என்பார்
தயங்காது பழித்திடுவார்
தன்மானம் விற்றேனும்
தன்னிலை நாட்டிடுவார்
தானம் பெற மானம்
தயங்காது விலைகொடுப்பார்.
.... இங்கே பதியப்பட்டது கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: கண்காணி, துரோகம், ப்ரூட்டஸ் | Leave a Comment »

